| மனத்தினால் செய்யப்படும் பாவங்கள்! | ![]() | ![]() | ![]() |
| Tuesday, 28 October 2008 20:01 |
மனத்தினால் செய்யப்படும் பாவங்களாவன : * அபித்யா : பிறரது செல்வத்தையும் பொருளையும் விரும்புவது, பிறரிடம் இருப்பதைக் கண்டு ஏங்குவதும் ஆகும். * வியாபன்ன சித்தம் : பிற உயிர்கள் அழிந்துவிடக்கூடாதா என மனத்தால் நினைத்தல். * மித்யா திருஷ்டி : எதிர்மறை எண்ணங்கள் கொண்டிருத்தல். அதாவது, 'பிறருக்கு ஈவதால் எந்தப் புண்ணியமும் இல்லை'; 'இவ்வுலகத்தில் பாவங்களும் இல்லை, பரலோகமும் இல்லை' என்பது போன்ற எண்ணத்தைக் கொண்டிருத்தல். இந்த மூன்று வகையான மனத்தினால் செய்யப்படும் பாவங்களையும் செய்திராமல், மேற்கூறினவற்றுக்கு நேரெதிராகச் செயல்படுவதே தர்மாசரணம் என்கிறது பெளத்தம்! ஐம்புலன்களில் ஒன்றான வாய் மூலம் செய்யப்படும் பாவங்களையும், அவற்றைச் செய்யாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சிறப்பாக வலியுறுத்துகிறது, பெளத்தம். வாய் மூலம் செய்யப்படும் பாவங்களாவன: பொய் பேசுதல் : தெரியாததை தெரியும் என்று கூறுதல்; காணாததைக் கண்டாதாகச் சொல்லுதல்... இவ்வாறு சுய லாபத்துக்காக பொய் பேசுதல் பாவச் செயலாகும். கோள் சொல்லல் : பிறருக்குத் துன்பம் ஏற்படுத்தும் விதமாகவும், கலகமூட்டும் நோக்கத்துடனும் கோள் சொல்லுதலும் பாவமே. கடுமையாக பேசுதல் : பிறருக்கு வருத்தத்தையும், துன்பத்தையும் அளிக்கும் விதமாக கடுமையான மொழிகளால் பேசுதல். கெட்ட வார்த்தைகளைப் பிரயோகித்தல். வீண்பேச்சு : பிரலாபித்தல் என்று சொல்லக்கூடிய சமயம் அறியாது பேசுதல்; உண்மையில்லாததைச் சொல்லுதல்; காரணமின்றி உளறுதல்; அர்த்தம் மற்றும் நியாயம் அற்ற பேச்சு. மேற்குறிப்பிட்ட வாயினால் செய்யப்படும் நான்கு பாவங்களையும் செய்தல் கூடாது என்பதை கடுமையாக வலியுறுத்துகிறது 'பெளத்தம்'. |
| | எம்மைப்பற்றி | தொடர்புக்கு | விளம்பரத்திற்கு | உங்கள் கருத்து | |