தாம்பரம் அருகே ஏடிஎம்-ல் பணம் எடுப்பதற்காக நடந்து சென்ற இன்ஜினியர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த கௌரிவாக்கம் புனிதவதி காலனி ராஜிவ்காந்தி தெருவைச் சேர்ந்தவர் நாகேந்திரன் (58). இவர் ஈசி பழுது பார்க்கும் தனியார் நிறுவனத்தில் இஞ்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்காக வேளச்சேரி பிரதான சாலையில் நாகேந்திரன் நடந்து சென்று கொண்டிருந்தார்.

மேலும் படிக்க:87ஆவது வயதில் 10வது பாஸ் செய்த முன்னாள் முதலமைச்சர்

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாகேந்திரன் மீது மோதியதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே நாகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலையூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகேந்திரன் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்ற நபரை இருசக்கர வாகனத்தில் இடித்து விட்டு தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link