கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மழவராயனூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி வேலாயுதம் மற்றும் அவரது உறவினர் காட்டுநெமிலி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
அப்போது திம்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் பை ஒன்று கிடந்ததை பார்த்து அவர்கள் அதை எடுத்து பிரித்துக் கூட பார்க்காமல் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதனை பிரித்துப் பார்த்த போது அதில் ரூபாய் 89,000 பணம் இருந்தது தெரியவந்தது. பின்னர் பணத்தைப் பெற்றுக் கொண்ட போலீசார் பணத்தைத் தவறவிட்டது யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)
மேலும் பார்க்க…‘கிடைத்த கேப்பில் விபரீதம்’ ரயில் பெட்டிக்கு இடையே இளைஞர்கள் பயணம்..
இந்நிலையில் சாலையில் கிடந்த 89,000 ரூபாய் பணம் கொண்டு வந்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளர்களுக்கு அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
செய்தியாளர்: எஸ்.செந்தில்குமார், கள்ளக்குறிச்சி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: