நாட்டின் சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாநில வளர்ச்சிக்காக பல்வேறு அரசு துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக பாராட்டு தெரிவிப்பது வழக்கம்.
இந்நிலையில், 74வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பாக சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் கேடயமும், சான்றிதழும் நேற்று வழங்கப்பட்டது.
இந்நிலையில் அதிர்ச்சியூட்டும் தகவலாக டாஸ்மாக்கில் மது விற்பனையில் அதிக வருவாய் ஈட்டியதற்காக மாவட்ட மேலாளர், விற்பனையாளர், மேற்பார்வையாளர்கள் என 4 பேருக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் பாராட்டு சான்றிதழ் வழங்கியதன் அவலநிலை குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸ் வடிவிலான பதிவுகள் வைரலாகியது. மாவட்ட மேலாளர், 2 மேற்பார்வையாளர்கள், ஒரு விற்பனையாளர் என 4 பேருக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழை மாவட்ட நிர்வாகம் திரும்ப பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)
சமூக வலைதள பதிவுகளால் இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு வழங்கிய பாராட்டு சான்றிதழ் மாவட்ட நிர்வாகம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
செய்தியாளர் : கார்த்திகேயன் – கரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: