கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, ஜம்மு காஷ்மீர், குஜராத் கேரளா, சென்னை உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் நிலையத்தில் உள்ள டிக்கட் கவுண்டர்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பதால் தெரிந்த பயணிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதில் பெரும்பாலும் தமிழ் தெரிந்தாலும் அவர்கள் தமிழில் பேசாமல் ஹிந்தியில் மட்டுமே பேசுவதாக கூறப்படுகிறது.

இதனால் பயணிகள் முன்பதிவு குறித்த சந்தேகங்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கும், பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

இந்நிலையில், நாகர்கோவில் ரயில்வே கவுண்டரில் பயணி ஒருவருக்கும், ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒருமையில் திட்டும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் : சரவணன் – நாகர்கோவில்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link