வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் கிராமத்தில் கால்நடைத் துறையின் கோமாரி நோய் தடுப்பு சிறப்பு முகாம் நடந்தது. இதனை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார். நிகழ்வில் கால்நடைகளுக்கு தடுப்பூசிகளும் போடப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், “வேலூர் மாவட்டத்தில் உள்ள சில பகுதிகள் நிலநடுக்கம் வரும் பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளது கடந்த ஆண்டு அதற்கு முன்பும் நிலநடுக்கம் வந்தது.

உங்கள் நகரத்திலிருந்து(வேலூர்)

வேலூரைப் பொறுத்தவரை பாதுகாப்பான பகுதியில்தான் இருக்கிறோம். தற்போது உலகளாவிய அளவில் பெரிய நிலநடுக்கங்கள் வந்துள்ளன. அதன் தாக்கம் காரணமாக ஏற்கனவே நிலநடுக்கம் வந்த பகுதிகளில் லேசான நில அதிர்வு மீண்டும் வரலாம் என மத்திய அரசு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதியிலுள்ள மக்களுக்கு மாற்று இடங்களில் வீடு கட்டி தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.

அகரம்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்கா ஒன்று தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார், “பள்ளிகொண்ட உழவர் சந்தை பணிகள் 60 சதவீதம் முடிவடையும் நிலையில் உள்ளது. கோமாரி நோய் தடுப்பூசியை மக்கள் பயன்படுத்தி கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்” என கூறினார்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link