ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் களத்தில் உள்ளனர். நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகாவும், தேமுதிக சார்பில் ஆனந்தனும் முதன்மைக் கட்சிகளின் வேட்பாளர்களாக இடம் பெற்றனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இதையும் படிங்க; ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அப்டேட் உடனுக்குடன்

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். மூன்று சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் 32,506 வாக்குகளும், அதிமுக 11,219 வாக்குகளும் பெற்றிருந்தன. சுமார் 21,287 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலையில் இருந்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(ஈரோடு)

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து விறுவிறுவென வெளியே வந்த அதிமுக வேட்பாளர் தென்னரசு காரில் ஏறி புறப்பட்டார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “ஜனநாயகம் தோற்றுவிட்டது, பணநாயகம் வென்றது” எனக் கூறிவிட்டு மற்ற கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து கிளம்பினார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link