தாராபுரம் அருகே மது போதையில் தந்தை, மகன் இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தந்தையை அடித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
திருப்பூர், மாவட்டம் தாராபுரம், அலங்கியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான தளவாய் பட்டினம் கிழக்கு தெருவை பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (56). அவரது மகன் காளிதாஸ் (29). இவர்கள் இருவரும் அடிக்கடி மதுபோதையில் தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்றைய தினம் இரவு மது போதையில் தந்தை, மகன் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் தண்டபாணி இரும்பு கம்பியை எடுத்து தனது மகன் காளிதாசை தாக்கியுள்ளார்.ஆனால், காளிதாஸ் சுதாரித்து கொண்டு, கம்பியை பிடுங்கி அவரது தந்தையின் பின் மண்டையில் அடித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
இதில் ,தண்டபாணி மயங்கிய நிலையில் விழுந்துள்ளார். பின்னர் தகவல் அறிந்து வந்த உறவினர்கள் அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே, உயிரிழந்து விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தகவல் அறிந்த அலங்கியம் போலீசார் காளிதாசை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில் மகன், தந்தையை அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: