கரூரில் அரசு விழாவில் சரளமான ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி புத்தகங்களை பரிசளித்தார்.
கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் இருவர் ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றிருந்தார். அப்போது நிகழ்ச்சியில், 2 மாணவிகளும் சரளமான ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினர்.
இந்நிலையில், கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண் குழந்தைகள் நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்புத் திட்டங்கள் குறித்து ஆங்கிலத்தில் கம்பீரமாக எடுத்துரைத்த மாணவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டினார். மேலும் இருவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார். இதனை மாணவிகள் மகிழ்ச்சியுடன் வாங்கி அவருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த விழாவில் ஏராளாமனோர் கலந்துகொண்டனர்.
உங்கள் நகரத்திலிருந்து(கரூர்)
செய்தியாளர் : கார்த்திகேயன் – கரூர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: