தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் துரைப்பாண்டி. கயத்தார் அருகே உள்ள கம்மாப்பட்டி சொந்த ஊர் என்றாலும், தற்போது கோவில்பட்டியில் இருந்து தினமும் பள்ளிக்கு சென்று வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக துரைப்பாண்டி வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

சிறுவயதில் இருந்தே சுதந்திர போராட்ட வீரர்கள், வரலாற்று மன்னர்கள் கதைகளை கேட்பதிலும், நாடகங்களை பார்ப்பதிலும் ஆர்வம் கொண்ட துரைபாண்டி, அந்த கதையில் வரும் கதை நாயகர்களாக தன்னை ஒப்பனை செய்து நடித்து பார்ப்பதும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும், கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார். சிறுவயதில் அவரிடம் இருந்த ஆர்வம், துடிப்பு ஆகியவை தான் ஆசிரியராகப் பொறுப்பேற்றதும், அதனை மாணவ-மாணவிகளின் கற்றலை ஊக்குவிக்கவும், அவர்கள் புரிந்து ஆர்வத்துடன் படிப்பதற்கும் பெற்றார்.

புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்

உங்கள் நகரத்திலிருந்து(தூத்துக்குடி)

தூத்துக்குடி

தூத்துக்குடி

பல வேதங்களில் அசத்தல் :

தமிழ் பாடத்தில் வரக்கூடிய பாடல்கள், வரலாற்று மற்றும் சுதந்திர போராட்ட நாயகர்கள் வேடமணிந்து துரைப்பாண்டி பாடங்களை மாணவர்களுக்கு கற்று தந்துள்ளார். திருவள்ளுவர், வீரபாண்டிய கட்டபொம்மன், மகாகவி பாரதியார், வ.உ.சி, ராஜராஜசோழன் என தான் சொல்லிக்கொடுக்கும் வகுப்பில் பாடம் வரக்கூடிய முக்கிய தலைவர்களின் வேதங்களை அணிந்தவாறு பாடம் எடுத்து அசத்தி வருகிறார்.

இதையும் படிங்க : 8ம் வகுப்பு தேர்ச்சியா? தஞ்சாவூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணி

2014ம் ஆண்டு தனது ஆசிரியர் பணியை தொடங்கிய துரைபாண்டி வேலூர் அணைக்கட்டு, புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள பள்ளிகளில் 4வது பள்ளியாக வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளாக ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வேடமணிந்து சென்று மாணவ-மாணவிகள் மத்தியில் பாடங்களை சொல்லி அவர்களுக்கு பாடம் எளிதில் சொல்லிக்கொடுத்து வருகிறார்.

கம்பீரத்துடன் பாடம் :

வேடமணிய தேவையான பொருள்களுக்காக தனது ஊதியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வாங்கி வருகிறார். தொடக்கத்தில் வேடமணியும்போது கொஞ்சம் சிரமப்பட்டு வந்தாலும், துரைப்பாண்டியன் முயற்சிக்கு மற்ற பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உதவி புரிய ஆரம்பித்துள்ளனர். அவர் வேடம் போடுவதற்கு துணை புரிந்து வருகின்றனர். வேடம் அணிந்தது மட்டுமல்ல, அந்த வேதத்திற்குரிய கம்பீரத்துடன் வகுப்பில் பாடம் நடத்துவதால் மாணவர்களுக்கு பாடங்கள் எளிதில் புரிந்து கொள்ளப்படுகின்றன. மேலும் தேர்வுகளில் அசத்தி வருகின்றனர்.

மாணவர்களுக்கு எளிய முறை:

இதுகுறித்து துரைப்பாண்டி பேசுகையில், “மாணவர்கள் புரிந்து கொண்டு படிக்காமல் மனப்பாடம் செய்து படிக்கும் நிலை இருப்பதை புரிந்து கொண்டேன். மேலும் காட்சிப் பொருளாக இருந்தால் அதனைப் புரிந்து கொள்கின்றனர் என்பதால் எனதுறையில் மாற்றம் கொண்டு வர வேடமணிந்து பாடத்தினை கற்பிக்கும் முறையை கொண்டு வந்தேன். இதனால் மாணவர்கள் இடையே மனப்பாடம் செய்வது குறைந்து பாடங்களை புரிந்து கொள்ள தொடங்கினர். அதற்குப் பிறகு மாணவர்கள் – ஆசிரியர்கள் இடையே இடைவெளி அதிகமாக இருந்ததால் தினந்தோறும் மாணவர்களின் சீருடை அணிந்து பள்ளிக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது, தனது முயற்சிக்கு தங்கள் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் நல்ல ஒத்துழைப்பு தருகிறார்கள்” என மகிழ்ச்சியுடன் கூறினார்.

புத்தகத்தில் வரும் கதாபாத்திரங்களாக மாறி பாடம்

ஈஸியா புரியுது :

இதுகுறித்து அப்பள்ளி மாணவி சுசீலாதேவி கூறுகையில், “ஆசிரியர்கள் போர்டில் எழுதி போர்டுவார்கள். அது எதுவும் புரியாது. கஷ்டமாக இருக்கும். வீட்டில் போய் படித்து பார்த்தாலும் புரியாது. ஆனால் தமிழ் ஆசிரியர் துரைப்பாண்டி வேடமணிந்து பாடல், கவிதை மற்றும் பாடம் சொல்லிக்கொடுக்கிறார். இந்த முறை தங்களுக்கு எளிதாக இருப்பதாகவும், நன்கு புரிகிறது. ஒரு முறை பாடத்தினை வாசித்தால், தேர்வில் நன்கு புரிந்து மதிப்பெண்கள் பெற்று வருகிறேன்” என உற்சாகத்துடன் கூறினார்.

இதையும் படிங்க : புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை – உதவி எண் அறிவித்த திருச்சி போலீஸ் எஸ்.பி

ஆசிரியர் என்ற முகமூடியை நீக்கி மாணவர்களுடன் மாணவராக இருந்து, பாடங்களை நடத்துவது மட்டுமின்றி, பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து உருவகப்படுத்தி காட்சியாக மாணவர்களின் கல்வி மற்றும் கற்பனை திறனை ஊக்குவித்து வரும் ஆசிரியர் துரைப்பாண்டியன் பாராட்டுக்குரியது.

செய்தியாளர் : மகேஷ்வரன் – தூத்துக்குடி

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link