சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த முத்துக்கருப்பன் என்பவர் தனது செல்போனுக்கு வந்த எஸ்.எம்.எஸ்.லிங்கை கிளிக் செய்ததால் அவரது வங்கி கணக்கிலிருந்து சுமார் ஒரு லட்ச ரூபாய் மாயமானது. இது தொடர்பான புகாரில் விசாரணை நடத்திய சைபர் கிரைம் பிரிவு போலீசார், கோவை பீளமேடு பகுதியில் செயல்படும் ஒரு நிறுவனம் மூலம் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டதைக் கண்டறிந்தனர்.
சரவணன் மற்றும் பாரதி என்ற தம்பதி 5 பெண்களை வேலைக்கு வைத்து நாள் ஒன்றுக்கு 3 லட்சம் எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளனர். எஸ்எம்எஸ் லிங் அனுப்பப்பட வேண்டிய செல்போன் எண்களை டெல்லியைச் சேர்ந்த சையது ரஹீப் குர்ஷீத் என்பவர் கொடுத்து வந்ததும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக 17 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடமிருந்து 30 கம்ப்யூட்டர்கள், சுமார் 300 செல்போன்கள், 25 ஆயிரம் சிம் கார்டுகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றியுள்ளனர்.
உங்கள் நகரத்திலிருந்து(சிவகங்கை)
மேலும் இந்த குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கும் இந்தியா முழுவதும் சைபர் கிரைம் பண மோசடியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்கிற கோணத்தில் மேலும் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: