திருப்பூர் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வதந்தி பரப்பப்பட்டது. இதனால் புலம் பெயர் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உண்மை நிலையை அறிய பீகார் அரசு, குழு ஒன்றை தமிழகம் அனுப்பியது. அதன்படி நேற்று சென்னை வந்த பீகார் மாநில குழுவினர் திருப்பூரில் ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்தில் பீகார் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், தொழிலாளர் ஆணையர் அலோக்குமார், சிறப்பு படை பணி காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார், நுண்ணறிவு பிரிவு ஐஜி கண்ணன், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபிநபு, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், பீகாரை பூர்வீகமாக கொண்ட திண்டுக்கல் டிஐஜி அபினவ் குமார் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள், தொழில்துறையினர், தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, 1 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பு மற்றும் தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் மாநில ஊரக வளர்ச்சி உள்ளாட்சி செயலர் பாலமுருகன், “திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி. பீகார் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினோம்.
உங்கள் நகரத்திலிருந்து(திருப்பூர்)
இங்கு பல சங்க பிரதிநிதிகள் உடன் பேசினோம். தவறான வீடியோக்கள் தமிழகத்தில் நடைபெற்ற சம்பவமாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோக்கள் காரணமாக பயம் ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மூலம் மார்ச் மாதம் முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கமளித்தனர். மேலும் கட்டுப்பாட்டு அறை மூலம் ஒலிப்பெருக்கி மூலம் இந்தியில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னலாடை நிறுவனங்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை கையாண்டது, மேலும் வதந்தி பரப்பியவர்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, விழிப்புணர்வு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளது. இந்தியில் தான் இதுகுறித்து பேசுகிறேன். அதனை ஒளிபரப்பினால் புலம் பெயர் தொழிலாளர்கள் அச்சம் நீங்கும்” என்று தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஷாங் சாய், “ட்விட்டர், யூடியூப், பேஸ்புக் பக்கங்களில் பதிவிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வீடியோக்களை தடை செய்ய வழக்கு பதிவு செய்து யூடியூப் மற்றும் ட்விட்டருக்கு பரிந்துரைத்துள்ளோம். பணம் சம்பாதிக்க பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க வதந்திகளை பரப்புகின்றனர். அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கவும் பரிந்துரைத்துள்ளோம்.
கட்டுப்பாட்டு அறைக்கு 600க்கும் மேற்பட்ட அழைப்புகள் பெறப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைவரும் விளக்கம் கேட்டு மட்டுமே வருகின்றனர். புகார் இதுவரை பெறப்படவில்லை” என கூறினார்.
இதனைத்தொடர்ந்து, பீகார் அசோசியேஷன் செயலாளர் முகேஷ் பேசுகையில், “புலம்பெயர் தொழிலாளர்களை தாக்குவது போன்ற வீடியோ, பீகாரில் இருந்தே பரவுகிறது. ஆனால், புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் எந்த அச்சுறுத்தலும் இல்லை. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு மக்களுடன் சுமூகமாக அமைதியான முறையில் வாழ்ந்து வருகின்றனர். எனவே இந்த வதந்திகளுக்கு பீகார் தொழிலாளர்கள் பதற்றமடைய தேவையில்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும் பீகார் அசோசியேசனை தொடர்பு கொள்ளலாம்” என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: