நடிகர் விஜய் எதிர்காலம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள், விஜய்யிடம் கேளுங்கள் என இயக்குனரும் நடிகர் விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், பழமை வாய்ந்த ஆலயமான ஸ்ரீ புத்திர காமேட்டீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு, நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வந்திருந்தார்.

இந்த தகவல், ஆரணி முழுவதும் பரவியதால் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் கோயில் வளாகத்தில் குவிந்தனர். அப்போது சாமி கும்பிட்டுவிட்டு வெளியே வந்த எஸ்.ஏ.சியிடம், நடிகர் விஜய்யின் எதிர்காலம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “ நடிகர் விஜய் எதிர்காலம் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் விஜயிடம் கேளுங்கள்” என்று பதிலளித்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(திருவண்ணாமலை)

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

இது அங்கு குவிந்திருந்த விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்க்கும், எஸ்.ஏ.சி-க்கும் சில காலமாக பிரச்சனை இருந்துவருவதாக கூறப்படும் நிலையில், பல செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்யை கடுமையாக சாடியிருந்தார் சந்திரசேகர்.

செய்தியாளர்: ம.மோகன்ராஜ், ஆரணி.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link