புழலில் சாலையில் நடந்து சென்ற நண்பர்களை மர்மகும்பல் ஒன்று சரமாரியாக வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை புழல் திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ரிதம். இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டின் அருகே நண்பர் விஜய்யுடன் நடந்து கொண்டிருந்த போது, திடீரென வந்த மர்ம கும்பல் ஒன்று ரிதம்மை சரமாரியாக வெட்டியது. அப்போது தடுக்க முயன்ற நண்பர் விஜயையும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர்கள் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்தனர்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் இருவரையும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரிதம் உயிரிழந்த நிலையில், படுகாயம் அடைந்த விஜய் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
உங்கள் நகரத்திலிருந்து(திருவள்ளூர்)
செய்தியாளர்: பார்த்தசாரதி, புழல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: