கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூவளம்பேடு, கே.எஸ் சாலையில், புறக்காவல் நிலையம் அருகே வங்கி, தங்க நகை கடை, செல்போன் கடை உட்பட முப்பதுக்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு நோட்டமிட்ட நான்கு பேர் கொண்ட கும்பல் மாங்கிலால் சேட் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை, அடகு கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த 10,000 ரூபாயை திருடி உள்ளனர். மேலும் கடையில் இருந்து சிசிடிவி கேமராவில் ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்றனர்.

மேலும் அருகில் இருந்த பென்சி ஸ்டோரின் பூட்டை உடைத்து கடையில் இருந்த 15,000 ரூபாயையும் கொள்ளையடித்து சென்றனர். மேலும் அருகாமையில் இருந்த இரண்டு மளிகை கடைகளில் இரும்பு கதவுகளை உடைத்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து ரூ. 10,000 எடுத்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருவள்ளூர்)

திருவள்ளூர்

திருவள்ளூர்

தொடர்ந்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் கடையில் இருந்து டம்ளரை எடுத்துச் சென்று கடையின் பின்புறம் சாவகாசமாக மது அருந்திவிட்டு தப்பிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாதிரிவேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் மோப்பநாய் உதவியுடன் திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link