விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில் மகளிர் தின விழாவில் பெண்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அல்லம்பட்டி பகுதியில் மாத்து நாயக்கன்பட்டி சாலையில் உள்ள குமரன் மகாலில் கூரைக்குண்டு முதல்நிலை ஊராட்சி மன்றம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கூரைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி, விருதுநகர் ஜேசிஐ அமைப்பினர், விருதுநகர் கிழக்கு காவல்நிலைய ஆய்வாளர் ராஜ சுலோச்சனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
நிகழ்ச்சியில் தலைமை வகித்து பேசிய காவல் ஆய்வாளர் ராஜ சுலோச்சனா பெண் கல்வியின் அவசியத்தை எடுத்துரைத்தார். இவ்விழாவில் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட நிலையில், விருதுநகர் ஜேசிஐ அமைப்பு சார்பில் சிறந்த ஊராட்சி மன்ற தலைவர் விருது கூரைக்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்விக்கு வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: