நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வேம்பதேவன்காடு பகுதியை சோந்தவர் பன்னீா்செல்வம் (65) விவசாயி. இவரது மகன் கருணாநிதி(45). கருணாநிதிக்கும் அவரது மனைவி புனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னை புனித கணவரை விட்டு பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது. புனிதா பிரிந்து சென்றதற்கு தந்தை பன்னீர்செல்வம் தான் காரணம் என கூறி கருணாநிதி தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், வழக்கம்போல் பன்னீர்செல்வத்திடம் நேற்று கருணாநிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த கருணாநிதி தான் அனுமதியில்லாமல் வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியால் தனது தந்தை என்றும் பாராமல் பன்னீர்செல்வத்தை நோக்கி சுட்டுள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பியோட முயற்சித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(நாகப்பட்டினம்)
அப்போது துப்பாக்கி குண்டுகள் குறிதவறி அருகில் இருந்த தண்ணீர் டேங்கில் பாய்ந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக பன்னீர்செல்வம் உயிர் தப்பினார். இதையடுத்து, அங்கிருந்து தப்பித்து இதுகுறித்து வேதாரண்யம் காவல் நிலையத்தில் பன்னீர்செல்வம் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை போலீசார் கைது செய்தனர்.
மேலும், வேம்பதேவன்காடு, புளியங்குளத்தில் கிடந்த நாட்டு கள்ளத் துப்பாக்கியை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். குடும்ப தகராறில் தந்தையை மகன் கள்ளத்துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : பாலமுத்துமணி – வேதாரண்யம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: