ஈரோடு மாவட்டம் பவானியில் திருமணத்தை தாண்டிய உறவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர்கள் மீது கொதித்த எண்ணெயை ஊற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் வர்ணபுரத்தை சேர்ந்த மீனாதேவி என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது உறவுக்கார இளைஞரான கார்த்திக் என்பவருக்கும், மீனாதேவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது திருமணம் தாண்டிய உறவாக மாறியது.

இந்நிலையில், கார்த்திக்கிற்கு வேறு பெண்ணுடனும் தொடர்பு இருப்பது மீனாதேவிக்கு தெரியவந்தது. இது குறித்து கார்த்திக்கிடம் கேட்ட போது, ​​அந்த பெண்ணை தான், திருமணம் செய்து கொள்வதாக மீனாதேவியிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

உங்கள் நகரத்திலிருந்து(ஈரோடு)

இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தேவி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சமையல் எண்ணெய்யை கார்த்தி மீது ஊற்றினார். படுகாயம் அடைந்த கார்த்திக் தோல் உறிந்த நிலையில் கதறி அழுது துடித்து கொண்டிருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வழக்கு பதிவு செய்து மீனா தேவியை கைது செய்தனர்.

செய்தியாளர்: பாபு, ஈரோடு.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link