புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் பிரசித்தி பெற்ற காட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேர் திருவிழாவை காண குவிந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவப்பூர் காட்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும் அந்த வகையில் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் திருவிழா ஏற்பாடுகள் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, எஸ்பி வந்திதா பாண்டே, எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகர் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராமத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் திருவிழாவிற்கு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது.

மேலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கிழக்கு வீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக வந்த தேர் மீண்டும் கோயிலை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link