தனது வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிப்பதாக தி.மு.க. மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இறகுப்பந்து விளையாட்டு மைதான திறப்பு விழா அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் கே.என்.நேருவிற்கு கருப்பு கொடி காட்டியுள்ளனர். இதையடுத்து அமைச்சரின் ஆதரவாளர்கள் திருச்சி எஸ்.பி.ஐ. காலனியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உங்கள் நகரத்திலிருந்து(திருச்சி)
இந்நிலையில், வெளிநாடு சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய திருச்சி சிவா, தாக்குதலுக்கு உள்ளான தனது வீட்டை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எதையும் பேசும் மனநிலையில்தான் இல்லை என்று மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: