தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகள் வாந்தி மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டியில் அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 94 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆறாம் வகுப்பில் மட்டும் 2 மாணவர்கள் உட்பட 15 பேர் படிக்கின்றனர்.
இன்று பிற்பகல் மதிய உணவு இடைவேளையில் ஆறாம் வகுப்பில் பயிலும் மாணவிகள், ஆசிரியரின் மேசையில் வைத்திருந்த சத்து மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டுள்ளனர். இதில் அ.பள்ளிபட்டி பகுதியை சேர்ந்த 5 மாணவிகள் பிற்பகல் 2.30 மணியளவில் வாந்தி எடுத்து மயக்கம் அடைந்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(தர்மபுரி)
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், உடனடியாக மயக்கமடைந்த மாணவிகளை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஏ.பள்ளிபட்டி சப். இன்ஸ்பெக்டர் மதியழகன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். மாணவிகள் சத்து மாத்திரை சாப்பிட்டு மயக்கமடைந்த தகவல் அறிந்ததும் பெற்றோர்கள் உறவினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: ஆர்.சுகுமார், தருமபுரி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: