தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்த ஜெயபால். அவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா. தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் தனது தந்தையின் மெயிலில் இருந்து பிரதமர் பற்றி அவதூறு கருத்துக்களை டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியதாக தகவல்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து 10க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் விக்டரிடம் அரை மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் அந்த இளைஞரை அழைத்து சென்று, மத்திய அரசுக்கு சொந்தமான NFTEM வளாகத்தில் வைத்து 36 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)
தற்போது அந்த இளைஞரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, வேறு ஒரு ரகசிய இடத்தில் வைத்து மூன்றாவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தவிர உள்ளூர் காவல்துறையினருக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: