காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது காஞ்சிபுரம் மாநகராட்சியின் 49வது வார்டு காந்தி நகர் – ஸ்ரீ பெருந்தேவி நகர் இடையே செல்லும் கால்வாயில், மழைகாலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஸ்ரீபெருந்தேவி நகர் மக்கள் காந்திநகர் வழியாக காஞ்சி மாநகருக்குள் தங்களுடைய அன்றாட தேவைகளுக்காகவும், அவசர தேவைகளுக்காகவும் வந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். இதனால், இந்த கால்வாய் மீது பாலம் அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் காந்திநகர் – ஸ்ரீ பெருந்தேவி நகர் இடையே கால்வாய் மீது பாலம் கட்டும் பணிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பூமி பூஜை நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து, இணைப்பு பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டது. இதனை, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் ஆகியோர் இந்த புதிய பாலத்தை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க : 5 தலை நாகம் பாதுகாத்து வரும் 2,000 ஆண்டுகள் பழமையான போடி கீழச்சொக்கநாதர் கோயில் பற்றி தெரியுமா?

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

இந்நிகழ்ச்சியில், மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுருநாதன், மண்டல குழு தலைவர் சாந்தி சீனிவாசன், மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன், மாநகராட்சி ஆணையர் கண்ணன், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link