உலக தண்ணீர் தினத்தை ஒட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தண்ணீர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மார்ச் 22 ஆம் தேதி உலக தண்ணீர் தினமான அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் பேசும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், தண்ணீரின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், விசும்பின் துளிவிழியின் அல்லாமற்றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிசு என்ற குரலோடு தொடங்கிய மாவட்ட ஆட்சியர் இன்று நாகரிக வளர்ச்சியால் நீர் நிலைகள் மாசடைந்து வருவதாகக் கூறியுள்ளார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் ஆறு , ஏரி குளம் , கடல் போன்ற நீர் நிலைகள் மிகப்பெரிய அளவில் மாசை சந்தித்து வருகின்றன என்றும், கழிவுகளை நீர்நிலைகளில் சேராமல் தடுப்பதற்கான பொறுப்புகள் நாம் அனைவருக்கும் உள்ளது என்றும், இந்த தண்ணீர் தினத்தில் நாம் அனைவரும் நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் தண்ணீர் தின வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: