தென்னங்குடியில் விமரிசையாக நடைபெற்ற முத்துமாரியம்மன் தேரோட்டம் புதுக்கோட்டை தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது . சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் அம்மன் அருள் பெற்றனர்.

புதுக்கோட்டை அருகே தென்னங்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து வீதி உலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

ஸ்ரீ முத்துமாரியம்மனை சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் சிறப்பு தீபாராதனை காணப்பட்டது.

சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தேரை இழுத்துச் சென்றனர் .தேரில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அமர்ந்தவாறு வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்தார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link