ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் கிராமத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீவள்ளி தேவசேனா சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நீராவி கரிசல்குளம் கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ஆலயமானது. இந்த ஆலயத்தின் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம் திருவிழாவில் பக்தர்கள் காப்புகட்டி பால்குடம் எடுத்து அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், இந்தாண்டுகான பங்குனி உத்திரம் திருவிழாவானது கடந்த மாதம் 24ம் தேதி பந்தக்கால் நடப்பட்டு பக்தர்கள் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவள்ளி தேவசேனா ஸ்ரீசுப்ரமணிய சுவாமிகளுக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனைத்தொடர்ந்து, காப்புகட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த பால்குடம் எடுத்து, காவடி எடுத்து, வாயில் அலகுகள் குத்தி, ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த பங்குனி உத்திரம் திருவிழாவில் கமுதி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link