திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டைஅழகிய மன்னார் ராஜ கோபாலசாமி திருக்கோவிலில் பங்குனி பிரம்மோஸ்தவம் திருத்தேரோட்டத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோபாலா என கோஷங்கள் எழுப்பியவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பாளையங்கோட்டைஅழகிய மன்னர் ராஜகோபாலசாமி கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புகள் மிக்கது. இத்திருக்கோயிலில் பங்குனி பிரம்மோஸ்தவம் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இது தொடர்ந்து தினமும் ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபாலன் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.விழாவின் பத்தாம் நாள் திருவிழாவான பங்குனி உத்திரத் திருவிழா திருத்தேரட்டம் சிறப்பாக நடைபெற்றது.

உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)

திருநெல்வேலி

திருநெல்வேலி

இதற்காக காலை 7 மணிக்கு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ராஜகோபாலன் திருத்தேருக்கு எழுந்தருளினார் நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தில் பெரிய திருமொழி பிரபந்த கோஷ்டியினரால் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாள் தாயாருக்கு கற்பூர ஆரத்தி காட்டுகிறது.

பின்னர், பக்தர்கள் கோவிந்தா ஓடிவா கோபாலா ஓடிவா என கோஷங்களுடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது, நான்கு ரதவிதிகள் வழியாக சுற்றி வலம் வந்து நிலையத்தை வந்தடைந்தது. இதில், பக்தர்களுக்கு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்,.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link