புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வேம்பன்பட்டியில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவிலாகும். இந்தக் கோயிலில் கடந்த மார்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து திருவீதி உலா நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, மண்டகப்படி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட தேரில் சுப்பிரமணியசுவாமி எழுந்தருளினார். பின்னர் கிழக்கு ரத வீதியில் தொடங்கி 4 ரத வீதிகளின் வழியாக சுப்பிரமணிய சுவாமி தேர் வலம் வந்தது. தேரானது மா, பலா, வாழை இளநீர் உள்ளிட்ட இப்பகுதியில் விளையும் கனிகள், மலர்கள் மற்றும் காய்கறிகள், அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)

புதுக்கோட்டை

புதுக்கோட்டை

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link