திருமணமாகாமல் கருவுற்ற இளம்பெண்ணுக்கு ஏழு மாத அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் செய்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த 19 வயது பெண் திருமணம் ஆகாமலேயே கருவுற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வாழப்பாடியில் உள்ள நிகாரிகா என்ற தனியார் மருத்துவமனையில் இளம்பெண்ணை அவரது பெற்றோர் அனுமதித்துள்ளனர். கருவுற்று ஏழு மாதங்கள் ஆன நிலையில் தனியார் மருத்துவமனையில் இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)

இதனிடையே ஏழு மாத சிசுவும் இறந்து விட்டதாக தனியார் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்ட போது இறந்ததாக கூறப்பட்ட சிசுவின் உடலில் அசைவு உள்ளது.

உடனடியாக சிசுவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குழந்தை அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து இதுவரை புகார் ஏதும் அளிக்கப்படாத நிலையில் காவல் துறையினர் தனியார் மருத்துவர் செல்வாம்பாள் என்பவரை காவலில் வைத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link