பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கி முடிவடைந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியுள்ளது. இத்தேர்வு வரும் ஏப்ரல் 20ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமையிலான மாவட்ட கல்வி அலுவலர்கள் செய்துள்ளனர்.
பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேர்வை சிறப்பாகவும் புகார்கள் இன்றியும் நடத்துவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பாளர் வழித்தட அலுவலர் நிற்கும் படை பறக்கும் படை முதன்மை கண்காணிப்பாளர் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர் உள்ளிட்ட பணிகளுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)
நெல்லை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொது தேர்வு 22,897 மாணவ மாணவியர் எழுதினர். இவர்களுக்காக 91 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நெல்லை கல்வி மாவட்ட அளவில் 36 மையங்களும் சேரன்மகா தேவியில் 18 மையங்களும் வள்ளியூரில் 37 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 5 தனித்தேர்வர் மையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை மத்திய சிறையில் தேர்வு எழுதும் 12 கைதிகளுக்கு சிறைவளாகத்தில் தனி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.