விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 130வது ஆண்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் விருதுநகர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை பிடித்து இழுத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தின் பிரசித்தி பெற்றதாகவிளங்கும்விருதுநகர் மாரியம்மன் கோவிலில், பங்குனி பொங்கல் திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மாரியம்மன் கோவில் திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வந்தநிலையில், திருவிழாவின் இறுதி நிகழ்வாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.
ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற்ற தேரோட்ட நிகழ்வில் முதல் ரதத்தில் விநாயகர் எழுந்தருளி எதிர் சேவை செய்து அதன் பின்னால் பெரிய தேரில் மாரியம்மன் எழுந்தருளி பவனி வந்தார். தேரோட்ட நாளான ஏப்ரல் 4 அன்று மாலை 4மணியளவில் மாரியம்மன் கோவில் வாசலில் இருந்து புறப்பட்ட தேரானது கிழக்கு ரத வீதி வழியாக வந்து, தெற்கு ரத வீதியில் பொதுமக்கள் காட்சிக்காக நிறுத்தப்பட்டது. அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்ற நிலையில் அங்கிருந்து புறப்பட்டு சென்ற தேர் மேற்கு ரத வீதி வழியாக மீண்டும் வடக்கு ரத வீதியை சென்றடைந்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(விருதுநகர்)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்தாண்டு 130வது தேரோட்டம் என்பது குறிப்பிடத்தக்கது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: