திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக மாணவிகள் மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர் அருகே நீலக்குடியில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு விடுதியில் தங்கி படிக்கும் 2 மாணவிகள், அருகில் உள்ள கங்களாஞ்சேரி பகுதிக்கு சென்றுள்ளனர். உணவகத்தில் சாப்பிட்ட அவர்கள், உணவகம் அருகே உள்ள ஏடிஎம்மிற்கு சென்றுள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(திருவாரூர்)

திருவாரூர்

திருவாரூர்

அப்போது, ​​அங்கு நின்றிருந்த 4 இளைஞர்கள், மாணவிகளின் துப்பட்டாவை பிடித்து அத்துமீறியுள்ளனர். மாணவிகள் பயந்துகொண்டு உணவகத்திற்குள் ஓடிய நிலையில், அங்கும் புகுந்து கன்னத்தில் சரமாரியாக அறைந்து தாக்கியுள்ளனர். கத்தியை காட்டி மிரட்டி செல்போனையும் பறித்துள்ளனர். தாக்குதலை தடுக்க வந்த உணவக உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பதியில் அலை மோதும் பக்தர்கள் கூட்டம்… 8 கி.மீ தூர வரிசையில் 50 மணி நேரம் காத்திருப்பு…!

தெரிவிக்கப்பட்ட புகாரில், வண்டாம்பாளை கிராமத்தைச் சேர்ந்த செல்லதுரை மற்றும் வணிகராஜா திருக்கண்ணபுரம் காவல்நிலையத்தினர் கைது செய்தனர். தப்பியோடிய மேலும் 2 இளைஞர்கள் தேடப்பட்டு வருகின்றனர். காயமடைந்த மாணவிகள் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செய்தியாளர்: ராஜசேகர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link