பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும் நாளான ஆன்மீக பெரியவர்கள் கூறுகிறார்கள். அப்பேர்ப்பட்ட சக்தி மிகுந்த நாளில், தேவி வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும் என்பது நம்பிக்கை. அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபடுச்செய்தால் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம்.
மேலும் பௌர்ணமியன்று நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் விரைவாக பலிதமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பௌர்ணமியில் கோவிலுக்கு செல்வது கோவிலில் வலம் வருவது போன்ற விஷயங்களை செய்யும் போது நம் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். இதனால் மனதளவிலும் நல்லஎண்ணங்கள் அதிகரிக்கும் என்று கூறுவர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)
அனைத்து மக்களுக்கும் முழு சந்திரனைப் போல் மனம் நிறைய சாந்தி கிடைக்கவும், தடைபட்ட காரியங்கள் நிறைவேறவும், சுப காரியங்கள் நடந்தேறவும், பல்வேறு கோவில்களில் பவுர்ணமி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ மகா திரிசூலம் பிடாரியம்மன் திருக்கோவில் மற்றும் புதுக்கோட்டை கீழ ராஜாவீதியில் உள்ள ஸ்ரீ மனோன்மணி அம்மன் கோவில்களில் பவுர்ணமி பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: