என் பேபி நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் என்று உனக்கு ஏதாவது யோசனை இருக்கிறதா… இந்தப் பூமியில் உன்னைப்போல் யாரும் அழகாக இல்லை. மை பேபி, என் முயல் குட்டி உன்னைக் காதலிக்கிறேன். நான் உன்னைப் பற்றி நினைக்காத நேரமே கிடையாது. உன்னுடைய மிகவும் அழகான இதயத்தில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியும்.

அது உனக்கும் அப்படித்தான் என்று எனக்குத்தெரியும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சுகேஷ். இந்தக் கடிதத்தை சுகேஷின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக் வெளியிட்டிருக்கிறார்.
ஆனால், சுகேஷ் இதுவரை வெளியிட்டிருக்கும் கடிதங்களுக்கு ஜாக்குலின் எந்தப் பதிலும் தெரிவித்ததில்லை. சுகேஷ் மிரட்டிப் பணம் பறித்த வழக்கில் ஜாக்குலினும் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.