போடிநாயக்கனூர் நகர்ப்பகுதியில் வழி தவறி வந்த தலையில் கொம்பு போன்ற இறகுகள் கொண்ட அரிய வகை கழுகு ஆந்தையை வனத்துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

அரிய வகை ஆந்தை :-

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஸ்டேட் பேங்க் எதிரில் உள்ள அரசமரம் அருகில் சுமார் இரண்டு கிலோ எடை உள்ள வித்தியாசமான வகையிலான ஆந்தையை பொதுமக்கள் கண்டுள்ளனர். ஆச்சரியத்துடன் ஆந்தையை கண்டு களித்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறை அதிகாரியிடம் எண்.

உங்கள் நகரத்திலிருந்து(தேனி)

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் அரிய வகை ஆந்தை இந்தியன் ஈகில் அவ்ள் என்று அழைக்கப்படும் இந்தியக் கழுகு ஆந்தை என்பதை உறுதி செய்தனர்.

இந்தியக் கழுகு ஆந்தைக்கு பாறைக் கழுகு ஆந்தை, வங்கக் கழுகு ஆந்தை என்ற பெயரும் உண்டு. பொதுவாக இந்தியத் துணைக்கண்டத்தில் காணப்படும் இந்த ஆந்தையின் தலையில் கொம்பு போன்ற இறகுகள் உள்ளதால் பெரிய கொம்பு ஆந்தை எனவும் கூறுகின்றனர்.

குன்று மற்றும் பாறை நிறைந்த காடுகளில் காணப்படும் இந்த வகைகளான ஆந்தையின் உடல் முழுவதும் பழுப்பு மற்றும் சாம்பல் நிறங்களாகக் காணப்படும். இந்த வகையைச் சேர்ந்த ஆந்தைகள் தனியாக எங்கும் செல்லாது . இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட ஆந்தைகள் ஒன்றாக செல்வதை பார்க்க முடியும்.

தற்போது போடி பகுதியில் தனியாக இருந்த இந்திய கழுகு ஆந்தை என்ற அரிய வகை ஆந்தை வழி தவறி வந்ததால் வனத்துறை அதிகாரிகள் கணித்துள்ளனர். வனத்துறையினர் அரிய வகை ஆந்தையை உயிருடன் பத்திரமாக பிடித்து கால்நடை மருத்துவரிடம் முதலுதவி செய்து வனப்பகுதிக்கு சென்று விட்டனர்.இந்த வகை ஆந்தை தனது இரைகளை கழுகு போல் வேட்டையாடும் தன்மை உடையது என்று வனத்துறையினர் கூறினர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link