தேனி மாவட்டம் வீரபாண்டியில் சிலம்பம் பாண்டி பயிற்சி மையம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. இந்த சிலம்பப் போட்டியில் 3 வயது முதல் 12 வயது வரை உள்ள, 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி தலைமையில் நடைபெற்ற இந்த சிலம்பாட்டம் போட்டியில் வீரர்களுக்கு தேனி மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், மாவட்ட ஆயுதப்படை துணை கண்காணிப்பாளர் இளமாறன் ஆகியோர் பங்கேற்று சான்றிதழை வழங்கினர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்புரையாற்றிய மாவட்ட துணைக்கண்காணிப்பாளர் கூறுகையில், “மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சிலம்பம் போன்ற கலைகளில் ஈடுபட்டு உடல் ஆரோக்கியத்தையும் மன வலிமையையும் பெற வேண்டும். தமிழக அரசு சார்பில் சிலம்பாட்ட போட்டிக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(தேனி)
இதில் மாணவர்கள் பங்கேற்று, சிறப்பான முறையில் விளையாடி வெற்றி பெற்று அரசு வேலைகளில் சேர்ந்து பயனடைய வேண்டும்” என்றும் கூறினார். மேலும், இந்நிகழ்ச்சியில் சிலம்ப பயிற்சியாளர்கள், சிலம்பாட்ட வீரர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: