ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க பிரப்சிம்ரன் முதல் பந்திலேயே வெளியேறி அணிக்கு பின்னடைவை கொடுத்தார்.

அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் மேத்யூ ஷார்ட் 1 ரன்னும், ஜிதேஷ் சர்மா 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். சாம் கரன் 22 ரன்கள் சேர்த்தார். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினாலும், தனி ஒருவனாய் களத்தில் நின்று கேப்டன் ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 66 பந்துகளைகொண்ட அவர் 5 சிக்சர், 12 பவுண்டரியுடன் 99 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் கிங்ஸ் அணி 143 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் மயங்க் மார்கண்டே 4 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், மார்கோ ஜென்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணியில் தொடக்க வீரர்கள் ஹேரி புரூக் 13 ரன்னும், மயங்க் அகர்வால் 21 ரன்னும் எடுத்தனர். 45 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்த நிலையில் அணி இருந்தபோது இணைந்த ராகுல் திரிபாதி மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ரம் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தனர். 48 பந்துகளில் 3 சிக்சர் 10 பவுண்டரி என ராகுல் திரிபாதி 74 ரன்களையும், கேப்டன் மார்க்ரம் 21 பந்தில் 6 பவுண்டரியுடன் 37 ரன்களையும் எடுத்தனர். 17.1 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி இலக்கை எட்டியது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link