சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்தார். இதை அறிந்த பெற்றோர் 7 மாத கர்ப்பிணியாக இருந்த அவரை, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே, பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கூறினர். ஆனால் போலீசார் நேரில் சென்று பார்த்தபோது குழந்தைக்கு அசைவுகள் இருந்தன. இதையடுத்து அந்த குழந்தையை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, சிறுமிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் செல்வம்பாள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(சேலம்)
இதையும் படிங்க : ஜூமேட்டோ, ஸ்விக்கி நிறுவனங்கள் அரசே நடத்த வேண்டும்: சீமான் கோரிக்கை
ஆனால், தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறி செல்வம்பாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, சிகிச்சைக்குப் பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று வாழப்பாடி டிஎஸ்பி ஹரி சங்கரி தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குறை பிரசவத்தில் பிறந்து, மீட்கப்பட்ட குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவ துறையினர் தெரிவித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: