நாமக்கல் மாவட்டம் அருகே உள்ள குருசாமிபாளையம் நெசவாளர்கள், விசைத்தறியாளர்கள் அதிகம் நிறைந்த பகுதி ஆகும். இப்பகுதியில் உள்ள சிவசுப்ரமணியர் கோயிலின் பங்குனி உத்திர தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில்நடைபெறும். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இந்து-முஸ்லிம் சமுதாய மக்கள் ஒன்று கூடி, சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.இதன்படி, இந்த ஆண்டு இக்கோவிலின் தேர் திருவிழா வழக்கம் போல், கடந்த 27-ஆம் தேதி நடந்தது. இதனைத்தொடர்ந்து மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் இந்து முஸ்லிம்கள் ஒன்று திரண்டு சந்தனம் பூசிக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
திருவிழாவின் ஒரு பகுதியாக சிவசுப்பிரமணிய சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மரத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து, கொடிமரத்தில் வெள்ளைக் கொடியை ஏற்றி அனைவரும் நலமாக இருக்க துவா ஓதி பிரார்த்தனை செய்தனர். தேங்காய் பழம், நாட்டுச் சர்க்கரை, பொட்டுக்கடலை உள்ளிட்ட பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதையடுத்து, இரு தரப்பு மக்களும் ஒருவருக்கு ஒருவர் பூ மாலை மாற்றிக்கொண்டு, ஆரத்தழுவி சந்தனம் பூசிக் கொண்டு, வீடுகள் தோறும் சென்று கதவுகளில் சந்தனம் பூசினர். இந்த நிகழ்ச்சியில் இந்து-முஸ்லீம் பெருமக்கள் இணைந்து சந்தனம் பூசி ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்ததுடன், மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாய் இருந்தது.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
இந்தக் கிராமத்தில் கோடை காலத்தில், ஏற்படும் கொள்ளை நோய்களைத் தடுக்கும் வகையில், இரு மதத்தினரும் இணைந்து நடத்தும் சந்தனம் பூசும் விழா 120 ஆண்டுகளாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: