கூவாகம் கூத்தாண்டவர் கோயிலுக்கு சென்ற கள்ளக்குறிச்சி ஆட்சியர், தனது காலணியை உதவியாளரை அழைத்து எடுக்கச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் திருவிழா வரும் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண் குமார் ஜதாவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ​​கூத்தாண்டவர் கோயிலுக்கு செல்வதற்கு முன்பாக ஆட்சியர் ஷ்ரவண் குமார், தனது காலணியை கோயிலுக்கு வெளியே கழற்றினார். அப்போது, ​​அங்கிருந்த தனது டவாலியை சைகை மூலம் அழைத்தார், தனது காலணியை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, வயதில் மூத்தவரான டவாலி ஆட்சியரின் ஷூவை கைகளால் எடுத்துச் சென்றார்.

உங்கள் நகரத்திலிருந்து(கள்ளக்குறிச்சி)

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தனது காலணியை உதவியாளரை வைத்து எடுக்க சொன்ன ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link