தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதை தவிர கடலை எள், உளுந்து அதிக அளவில் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். இதனால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கடந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக மே மாதத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை, சம்பா, தாளடி நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி அதிக அளவு நடைபெற்ற நிலையில் கடலையும் தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிக அளவில் பயிரிடப்பட்டது. கடந்த மாதத்தில் தஞ்சை மாவட்டத்தில் கடலை அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் தற்போது ஒரத்தநாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link