கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஓராண்டு 3 மாதங்கள் மட்டுமே மீனவர்கள் தொழிலுக்கு செல்ல அரசு அனுமதி வழங்கியது. அதுவும் கடலில் தங்க அனுமதி இல்லை. இந்த அரசுக்கு நியூஸ் 18 உள்ளூர் செய்தித்தளம் மூலம் மீனவர்கள் சில கோரிக்கைகளை வைக்கின்றனர்.

அதில் “கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தைநம்பி350க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் நேரடியாகவும் 50 ஆயிரம் தொழிலாளர்கள் மறைமுகமாக உள்ளனர்.இங்கு தினமும் பலகோடி ரூபாய் வர்த்தகம் நடைபெறுவது வழக்கம். ஓரிரு நாட்கள் கடலில் தங்கி மீன்பிடிக்க இந்த பகுதி மீனவர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் விசைப்படகுகள் கரைக்கு வந்து செல்லும் டீசல் செலவு கூட கட்டுப்படி ஆகவில்லை” என்று மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

உங்கள் நகரத்திலிருந்து(கன்னியாகுமரி)

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

மேலும், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கும் தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகுகள் கடலில் தங்கி மீன் பிடிக்க அரசு மீன்வளத்துறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.



Source link