தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே, மாதங்களில் வெயில் சுட்டெரிக்கும். அதிலும் அக்னி நட்சத்திர காலத்தில்தான் வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருக்கும். பருவகால மாற்றத்தின் காரணமாக தஞ்சையில் கடந்த மாதம் அடிக்கடி மழை பெய்தும், வெயில் அடிப்பதுமாக இருந்தது.தற்போது தஞ்சை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தஞ்சையில் 37 டிகிரி செல்சியஸில் வெயில் அடித்த நிலையில்,ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, கும்பகோணம், பேராவூரணி, திருச்சிற்றம்பலம், திருவையாறு ஆகிய பகுதிகளில் வெயிலின் தாக்கம் 37-டிகிரிக்கும் அதிக அளவில் காணப்படுகிறது.

வெயிலின் தாக்கம் சுற்றுலா பயணிகளையும் வாட்டி வதைக்கிறது. தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரிய கோயிலின் அழகை ரசிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(தஞ்சாவூர்)

தஞ்சாவூர்

தஞ்சாவூர்

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும் கோயிலுக்கு வரும் பொதுமக்களுக்கு வசதியாக வளாகத்தில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.எனவே தஞ்சைக்கு வர திட்டமிடும் சுற்றுலா பயணிகள் முடிந்த அளவில் காலை மற்றும் மாலை வருவதே சிறந்தது.எனவே தஞ்சை மாவட்டத்தில் வரும் நாட்களில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link