காஞ்சிபுரம் அருகே தாமல் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தற்போது சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கம் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் தாமல் ஊராட்சியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகளுக்கு, செல்ல தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக சுரங்கப்பாதை அமைத்து தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சுரங்கம் அமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காஞ்சிபுரம் டி.எஸ்.பி ஜூலியஸ் சீசர் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.

உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:



Source link