உதகை நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் தேதி தொடங்கியது. தினமும் உற்சவராகிய மாரியம்மன் பல்வேறு அவதாரங்களில் தேரில் வீதி உலா வருவது வழக்கம். சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு ஏப்ரல் 18 ஆம் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் அதிகமான கிராமங்களில் வாழ்ந்து வரும் படுகர் இன மக்கள், ‘ஹெத்தையம்மன்’ என்ற பெண் தெய்வத்தை குல தெய்வமாக போற்றி வணங்கி வருகின்றனர். படுகர் இன மக்களின் வாழ்வியலோடு இரண்டற கலந்த தெய்வமாகவே ‘ஹெத்தையம்மனை கருதுகின்றனர்.
தேர் வீதி உலாவின் ஒரு பகுதியாக படுகர் இன மக்கள் ஒன்று திரண்டு ”ஹெத்தையம்மன்” அவதாரத்தில் காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய அம்மனை மனமுருக வேண்டினர். தேர் பவனி வரும் நகரின் பிரதான வீதிகள் ஆன லோயர் பஜார் மத்திய பேருந்து நிலையம், மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வழிநெடுகிலும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டு, படுகர் இன மக்களின் பாரம்பரிய பேண்ட் செட் இசை மற்றும் பஜனை பாடல்கள் முழங்க தேர் வீதி உலா வந்தது.
உங்கள் நகரத்திலிருந்து(நீலகிரி)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
தேர்பவனி நடைபெற்ற சாலைகளில் அப்போது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. காலை முதலே நடைபெற்ற சிறப்பு யாகங்கள் பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மதியம் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது .
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.