பாம்பன் தூக்குப் பாலம் திறக்கப்பட்டு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியாக சென்ற மூன்று இழுவை கப்பல்கள், இரண்டு மிதவை கப்பல்கள் மற்றும் மீன்பிடி விசைப் படகுகள் ஆகியவற்றை வடமாநில சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
பாம்பன் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பாம்பன் ரயில் பாலம், இந்த பாலம் வழியாக தற்போது ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், இந்த ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் மற்றும் செல்வதற்காக தூக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தூக்குபாலம் 100- ஆண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் ஒரு கட்டுமானம் ஆகும்.
இந்த கடல் பகுதி வழியாக கொச்சி, கேரளா, மும்பை, சென்னை, காக்கிநாடா, மேற்கு வங்காளம், விசாகப்பட்டினம், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய பகுதிகளுக்கு கப்பல்கள் செல்லும்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மும்பையில் காக்கிநாடா துறைமுகம் செல்ல இரண்டு மிதவை கப்பலும், மும்பையில் இருந்து சென்னை செல்வதற்காக ஒரு இழுவை கப்பலும் பாம்பன் தெற்கு துறைமுகத்திற்கு வந்து நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டன. இதையடுத்து, பாம்பன் துறைமுக அதிகாரிகள் அனுமதியுடன் பாம்பன் தூக்கு பாலமானது திறக்கப்பட்டது. இரண்டு இழுவை கப்பலும், இரண்டு மிதவை கப்பலும் காக்கிநாடா நோக்கியும், மற்றொரு இழுவை கப்பல் சென்னை நோக்கியும் சென்றது.
மேலும், தெற்கு கடல் பகுதியில் நின்று கொண்டிருந்த மீனவர்கள் விசைப்படகுகள் ஆகியவையும் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது, இதனை வடமாநில சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து கண்டு ரசித்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: