விழுப்புரம் அடுத்து திருக்கோவிலூரில் தந்தை உயிரிழந்தது போதும் மனம் தளராமல் தேர்வு எழுத சென்ற பத்தாம் வகுப்பு மாணவி. மாணவியின் உறுதியை கண்டு நெகிழ்ந்த பொதுமக்கள்.
விழுப்புரம் அருகே திருக்கோவிலூர் அடுத்த தாசரபுரம் பகுதியில் வசிப்பவர் முருகதாஸ். இவருக்கு இரண்டு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் முருகதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மூன்றாவது மகளான திலகா அருகே உள்ள டேனிஷ் மிஷன் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பத்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தந்தையின் இழப்பின் மூலம் துவண்டு போன நிலையிலும், நன்றாக படிக்க வேண்டும் என்று தந்தை கூறியதற்காக அவரின் மறைவிலும் மனம் தளராது உறுதியுடன் தேர்வு எழுத வந்தார் மாணவி திலகா. மாணவியை உறவினர்கள் கட்டித்தழுவி அழுது தேர்வினை நன்றாக எழுத வேண்டும் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.
உங்கள் நகரத்திலிருந்து(விழுப்புரம்)
இறந்த அப்பாவை மனதில் நினைத்து தேர்வுக்கு சென்ற மாணவியை கண்டு அருகில் இருந்தவர்கள் அனைவரும் கண் கலங்கினார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: