பங்குனி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை ஓட்டி காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் நடைபெற்ற வெள்ளி தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவில் நகரம் என போற்றப்படும் காஞ்சிபுரத்தில் முருகப்பெருமானே முதல் அடியை எடுத்துக்கொண்டு கச்சியப்ப சிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமான குமரக்கோட்டம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி முருகன் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலில் பங்குனி மாதம் கடைசி செவ்வாய் கிழமையில் நடைபெற்ற வெள்ளித்தேர் உற்சவத்தை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வெண்பட்டு உடுத்தி, வெள்ளிக்கவசம் சாற்றி,பஞ்ச வர்ண பூ மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து வள்ளி, தெய்வானை, தேவியுடன் மின்விளக்குகள் மற்றும் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் எழுந்தருளச் செய்து தூப தீப ஆராதனை செய்யப்பட்டது.
உங்கள் நகரத்திலிருந்து(காஞ்சிபுரம்)
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
வெள்ளித்தேர் உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா கோஷத்துடன், முருகனின் வெள்ளித்தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்று சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். பின்பு வெள்ளித்தேர் உற்சவத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: