ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி செவல்பட்டி காமாட்சி அம்மன் ஆலய பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, இரட்டை மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது, 50க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இந்த பந்தயத்தில் பங்கேற்றன.
சாயல்குடி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற காமாட்சி அம்மன், சக்தி விநாயகர், பைரவர் ஆலயங்கள் அமைந்துள்ளன. இங்கு ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா நடைபெறும், இதனை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் செவல்பட்டி கிராமத்தினரால் நடத்துவது வழக்கம். இந்நிலையில், இந்தாண்டு பங்குனி பொங்கல் திருவிழாவானது கடந்த 30-ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் ஒரு இரட்டை மாட்டுவண்டி பந்தயமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
இந்த இரட்டை மாட்டுவண்டி போட்டியில், ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டுவண்டி பந்தைய வீரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பந்தய தூரம் 5 கிலோமீட்டர் என நடத்தப்பட்ட இந்த போட்டியில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டுவண்டிக்கும், மாட்டுவண்டி வீரர்களுக்கும் கேடயங்களும் ரொக்கப்பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: