ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற 176 ரன்களை ராஜஸ்தான் அணி இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பந்து வீச்சை முதலில் தேர்வு செய்தார்.
இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசிய சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் ராஜஸ்தான் அணியின் ரன் குவிப்பை வெகுவாகக் கட்டுப்படுத்தினர். ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். தேவ்தத் படிக்கல் 38 ரன்கள் எடுக்க கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றம் அளித்தார். அஷ்வின், ஹெட்மேயர் தலா 20 ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.
தொடக்கத்தில் ராஜஸ்தான் அணி 200 ரன்கள் எடுக்கக் கூடும் என கணிக்கப்பட்டது. ஆனால் சிறப்பாக பந்துவீசிய சென்னை அணியின் பவுலர்கள் ராஜஸ்தானின் ரன் குவிப்பு வேகத்தை கட்டுப்படுத்தினர். ஆகாஷ் சிங், துஷார் தேஷ் பாண்டே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணி வீரர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: